Monday, 13 February 2017

பருப்புக்கீரை கடையல்

Need:
  • பருப்புக் கீரை - 1 கட்டு
  • பாசிப்பருப்பு - 1/4 கப்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு - 4 பல்
  • தக்காளி - 1 (பெரியது)
  • மிளகாய் வற்றல் - 4
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும். பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.

குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

சுவையான பருப்புக் கீரை கடையல் தயார். சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment