Tuesday, 14 February 2017

பருப்புகூட்டுச் சாறு

Need:
  • அரைக்க:
  • துவரம் பருப்பு - அரை கப்
  • காய்ந்த மிளகாய் - 4
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 5
  • புளி தண்ணீர் - 2 கப்
  • தாளிக்க:
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 5
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2 கப் அளவு புளி தண்ணீர் கரைத்து வைக்கவும். தாளிப்பதற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஊற வைத்த பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அதனுடன் கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை புளி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

வாணலியில் அரைத்த விழுதை போட்டு சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கை விடாமல் களி கிண்டுவதை போல் 3 நிமிடம் கிண்டவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் கிரேவியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

சுவையான பருப்பு கூட்டு சாறு தயார். இதை சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

No comments:

Post a Comment