Need:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை எடுத்து சற்று ஆறவைத்து, நறுக்கின இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து கிளறிவிடவும்.
அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
க்ரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான முட்டை மசாலா தயார்.
- முட்டை - 5 வேக வைத்தது
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- இஞ்சி - சிறிது
- பூண்டு - 4 பல்
- கொத்தமல்லி - சிறிதளவு
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய்
- தாளிக்க
- சோம்பு - அரை தேக்கரண்டி
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- பிரிஞ்சி இலை - சிறிதளவு
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை எடுத்து சற்று ஆறவைத்து, நறுக்கின இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து கிளறிவிடவும்.
அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
க்ரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான முட்டை மசாலா தயார்.
No comments:
Post a Comment