Need:
- கத்தரிக்காய் - 6
- உருளைக்கிழங்கு - ஒன்று
- சின்ன வெங்காயம் - 15
- பச்சை மிளகாய் - 4
- தக்காளி (சிறியது) - ஒன்று
- புளி - நெல்லிக்காய் அளவு
- அரிசி களைந்த நீர் - ஒரு கப்
- மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
Process:
கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும்.. சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி
வைக்கவும். அரிசி களைந்த நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக்
கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
அத்துடன் புளி தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் வரவிடவும்.
ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சற்று கெட்டியாகும் வரை 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
மதுரை ஸ்பெஷல் கத்தரி உருளை மண்டி தயார். இது எலுமிச்சை சாதம், புளியோதரை
என அனைத்துடனும் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற பக்க
உணவு இது.
No comments:
Post a Comment