Wednesday, 15 February 2017

கார சட்னி

Need:
  • தக்காளி - 10
  • காய்ந்த மிளகாய் - 5
  • பூண்டு - 5 பல்
  • நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
  • கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - தேவைக்கேற்ப
 Process:
முதலில் தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி வைக்கவும்.

தக்காளி, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் வற்றி எண்ணெய் மேலாக வரும் வரை கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் சுவையான கார சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பால் கொழுக்கட்டை

Need:
  • அரிசி - ஒரு கப்
  • வெல்லம் - 300 கிராம்
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • கல் உப்பு - அரை தேக்கரண்டி
  • தண்ணீர் - 5 கப்
Process:
வெல்லத்தை பொடியாக நசுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கெட்டியாகவும் நைசாக அரைக்கவும். கிரைண்டரை கழுவி அரை கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.

அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை முறுக்கு பிழியும் அச்சியில் மூன்று கண் உள்ள அச்சியில் உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து அதை வெல்ல பாகில் சுற்றிலும் பிழிந்து விடவும். அதை போல எல்லா மாவையும் பிழிந்து விடவும்.

கிரைண்டரை கழுவி எடுத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்து பொங்கி வரும் போது சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

மாவை பிழிந்தவுடன் கரண்டியை வைத்து கிளறக் கூடாது. ஆனால் சிம்மில் வைத்த பின்னர் ஒரு முறை மெதுவாக கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து திக்கானதும் இறக்கி விடவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

கத்தரி உருளை மண்டி

Need:
  • கத்தரிக்காய் - 6
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • சின்ன வெங்காயம் - 15
  • பச்சை மிளகாய் - 4
  • தக்காளி (சிறியது) - ஒன்று
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • அரிசி களைந்த நீர் - ஒரு கப்
  • மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
 Process:
கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும்.

பிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.

அத்துடன் புளி தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் வரவிடவும்.

ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சற்று கெட்டியாகும் வரை 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

மதுரை ஸ்பெஷல் கத்தரி உருளை மண்டி தயார். இது எலுமிச்சை சாதம், புளியோதரை என அனைத்துடனும் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற பக்க உணவு இது.

காரட் கீர்

Need:
  • காரட் - 3
  • பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி
  • பால் - அரை கப்
  • பாதாம் பருப்பு - 8
  • சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி
  • உப்பு - ஒரு சிட்டிகை
Process:
காரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம். சுவையான காரட் கீர் தயார்.

மதுரை கறி தோசை

Need:
  • மட்டன் கொத்து கறி - 200 கிராம்
  • தோசை மாவு - ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • முட்டை - 3
  • இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சீரகதூள் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு,- அரை தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக பஞ்சாக வெந்திருக்க வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை அடித்து வைக்கவும் (உப்பு தேவையில்லை). வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும்.

அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும்.

அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது).

அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும்.

அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.

ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. காரசாரமாக அப்படியே சாப்பிடலாம்.