Wednesday, 15 February 2017

2 இன் 1 பூரி

Need:
  • பீட்ரூட் - 100 கிராம்
  • பசலைக்கீரை - ஒரு கட்டு
  • கோதுமை மாவு - அரைக் கிலோ
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
Process:
கோதுமை மாவை சலித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பசலைக்கீரையை தனித்தனி இலைகளாக ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் அலசிய பசலைக்கீரையை போடவும். போட்ட உடனே அடுப்பை நிறுத்தி விடவும். அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் சீவி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும். பிறகு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.

இதேப் போல் வேக வைத்த பசலைக்கீரையை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

முதலில் கால் கிலோ கோதுமை மாவுடன் அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. எண்ணெயை கையில் தொட்டு கொண்டு சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசையவும்.

இதைப் போல் மற்றொரு கால் கிலோ கோதுமை மாவுடன் பசலைக்கீரை விழுதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கால் கப் தண்ணீரை தெளித்து விட்டு பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த இரண்டு மாவையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிசைந்த மாவு இரண்டிலும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுக்கவும். இரண்டையும் சேர்த்து வைத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.

சற்று பெரியதாக தேய்த்து விட்டு ஒரு வட்டமான தட்டை வைத்து வெட்டி ஓரத்தில் உள்ள மீதமுள்ள மாவை எடுத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு அதன் மேல் கரண்டியால் எண்ணெய் ஊற்றவும்.

பூரி நன்கு உப்பி வந்ததும் அரிக்கரண்டியால் எடுக்கவும்.

சுவையான கலர்புல்லான டூ இன் ஒன் பூரி தயார்.
 

தந்தூரி சிக்கன் பிரியாணி

Need:
  • சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :
  • தயிர் - ஒரு கப்
  • பூண்டு - ஒன்று
  • இஞ்சி - ஒரு துண்டு
  • கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  • கறிவேப்பிலை - சிறிது
  • பச்சைமிளகாய் - 2
  • லவங்கம் - 4
  • எலுமிச்சை - பாதி
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பிரியாணி செய்ய :
  • அரிசி - அரை கிலோ
  • சிக்கன் லெக்பீஸ் - 4
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  • தாளிக்க :
  • பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2
Process:
சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.

அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

Tuesday, 14 February 2017

தேங்காய்ப்பால் மீன் குழம்பு

Need:
  • மீன் - அரை கிலோ
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • தேங்காய் பால் - 2 கப்
  • குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 4
  • பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • புளி தண்ணீர் - 2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.

அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்க்கவும்.

குழம்பு பொடி சேர்த்து பிரட்டியவுடன் புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் மீன் சேர்த்து வேக விடவும். மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் மேலே தெளிந்தவுடன் இறக்கவும்.

சுவையான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்.

மொச்சை சிப்ஸ்

Need:
  • பிஞ்சு மொச்சை - முக்கால் கப்
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • பெருங்காயம் - சிறு குண்டு மணி அளவு
  • எண்ணெய் - அரை கப்
Process:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொரித்து எடுத்து பொடி செய்துக் கொள்ளவும். பிறகு மொச்சையை போட்டு மொறுவலாக பொரித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு குலுக்கவும். பொரித்தவுடனே மிளகாய் தூள் சேர்க்கவும். அப்போதுதான் மொச்சையில் மிளகாய் தூள் சேரும்.

சுவையான மொருமொரு மொச்சை சிப்ஸ் ரெடி.

கடலைப்பருப்பு பணியாரம்

Need:
  • அதிகம் புளிப்பில்லாத மாவு - ஒரு கப்
  • கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

மாவில் ஊற வைத்த கடலை பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி கொள்ளவும்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் விட்டு டம்ளரில் இருக்கும் மாவை பணயாரங்களாக குழியில் முக்கால் குழி வரை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.

பாதி வெந்ததும் திருப்பி போட்டு சிறிது சிவக்க வேக விட்டு எடுக்கவும்..

சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார். கார சட்னியுடன் பரிமாறலாம்.