Friday, 17 February 2017

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி

Need:
  • சிக்கன் - ஒரு கிலோ
  • முழு தேங்காய் ( சிறியது) - ஒன்று
  • பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
  • தக்காளி - 2 (பெரியது)
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
 Process:
வெங்காயம், தக்காளியை தனித் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அனைத்து பொடி வகைகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தேங்காயை அரைத்து 2 கப் பால் எடுத்து வைக்கவும்.

சிக்கனை கழுவி சுத்தம் செய்து பொடி வகைகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்க்கவும்.

தக்காளி வதங்கியதும் பிசறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வேக விடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதும் வேண்டுமெனில் சிறிது சேர்க்கலாம்.

சிக்கன் தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான சிக்கன் தேங்காய் பால் கிரேவி ரெடி. இது சாதம், சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

புளியோதரை

Need:
  • மிளகாய் வற்றல் - 25
  • அரிசி - அரை படி
  • வேர்க்கடலை - அரை கப்
  • வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - அர நெல்லிக்காய் அளவு
  • கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
  • புளி - ஆரஞ்சு பழ அளவு
  • கல் உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • வெந்தயம் - அரை மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 100 மில்லி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கராண்டி
  • சீனி - 3 தேக்கரண்டி
 Process:
வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளியை போட்டு அதனுடன் உப்பு போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து 3 1/2 கப் புளித் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை பிய்த்து போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு மிளகாயை போட்டு தீயை குறைந்து வைத்து வதக்கவும்.

அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு ஒரு முறை கிளறி விட்டு புளித் தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், சீனி போட்டு கொதிக்க விடவும். புளித் தண்ணீரை ஊற்றியதும் தீயை அதிகமாக வைத்து செய்யவும்.

பெருங்காயத்தையும் வெந்தயத்தையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

15 நிமிடம் கொதித்ததும் கிளறி விடவும். 8 நிமிடம் கழித்து பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி போட்டு கிளறி கொண்டே இருக்கவும்.

ஆறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். கைப்படாமல் இருந்தால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

சாதத்தை பொலபொலவென்று வடித்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் ஊற்றுவதால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் அதன் மேல் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு அதில் தேவையான அளவு புளிக்காய்ச்சல் போட்டு நன்கு கலந்து விடவும்.

சுவையான புளியோதரை தயார்.

Wednesday, 15 February 2017

பீன்ஸ் கேரட் பருப்புக் கறி

Need:
  • பீன்ஸ் - கால் கிலோ
  • கேரட் - ஒன்று
  • துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • காய்ந்த மிளகாய் - ஒன்று
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • சாம்பார் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை மலர்ந்த பதத்தில் வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வேக வைத்த பருப்பில் உள்ள தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துப் பிரட்டவும்.

அதனுடன் வேக வைத்த பீன்ஸ் மற்றும் கேரட்டைச் சேர்த்து, பருப்பு தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

காய்களுடன் உப்பு, காரம் சேர்ந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் பிரட்டிவிடவும்.

காய்கள் பருப்புடன் சேர்ந்து கெட்டியாகி கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்.

பக்க உணவாகப் பரிமாற, சுவையான பீன்ஸ் கேரட் பருப்புக் கறி தயார்.

மொரோக்கன் லேம்ப் சாப்ஸ்

Need:
  • மட்டன் சாப்ஸ் - 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • பேப்ரிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • புதினா - 5 இலைகள்
  • பார்ஸ்லி - 10 இலைகள்
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
முதலில் மட்டன் சாப்ஸைக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய புதினா, பார்ஸ்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சாப்ஸைப் பொரித்து எடுக்கவும்.

சுவையான மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் தயார். பார்ஸ்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை பார்ட்டிகளில் ஸ்டாட்டராக பரிமாறலாம்.

குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்

Need:
  • குதிரைவாலி - ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 2 (சிறியது)
  • இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது - 3 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • தேங்காய்ப்பால் - ஒரு கப்
  • கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2
Process:
குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.

குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும்.

வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும். தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான குதிரைவாலி தக்காளி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.