Tuesday, 14 February 2017

மாங்காய் பச்சடி

Need:
  • மாங்காய் - ஒன்று
  • வெல்லம் - 1/2 கப்
  • ஏலக்காய் - 5
  • கடுகு - 3/4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
Process:
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை கேரட் துருவல் போல் துருவிக்கொள்ளவும். வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடிச்செய்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

தண்ணீரில் துருவிய மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.

மாங்காய் வெந்ததும் பொடிசெய்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். மாங்காயில் வெல்லம் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாங்காயும், வெல்லமும் ஒன்றாக கலந்தப்பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை வைத்திருந்து இறக்கவும்.

சுவையான மாங்காய் பச்சடி தயார்.

மீன் புளி வறுவல்

Need:
  • மீன் - 7 அல்லது 8 துண்டுகள்
  • 65 பொடி - 1 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • புளித் தண்ணீர் - 3 தேக்கரண்டி
  • பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
Process:
ஒரு தட்டில் 65 பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு கலந்து கொள்ளவும்.

அதனுடன் பூண்டு விழுது சேர்த்து பிசைந்து தேவைக்கேற்ப புளித் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

அதில் மீன் துண்டுகளை போட்டு முழுவதும் தடவி விட்டு முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான மீன் புளி வறுவல் தயார்.

பிட்ஸா தோசை

Need:
  • தோசை மாவு - ஒரு கப்
  • முட்டை - ஒன்று
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - 2 கொத்து
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - 2 சிட்டிகை
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
Process:
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும்.

அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும்.

மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சுவையான பிட்ஸா தோசை தயார்.

வற்றல் குழம்பு

Need:
  • மல்லி - 2 மேசைக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 5
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • கடலை பருப்பு - அரை மேசைக்கரண்டி
  • துவரம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
  • சுண்டைக்காய் வற்றல் - ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
Process:
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் முதலில் மல்லி மற்றும் மிளகாய் வற்றல் இரண்டையும் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

பிறகு கடலை பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் போட்டு 2 நிமிடம் சிவக்க வறுக்கவும். அதன் பின்னர் சிவந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு கால் கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊற வைத்த புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். இதே போல இரண்டு முறை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து மொத்தம் ஒன்றரை கப் புளி கரைச்சல் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் சிவக்க வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலை தாளித்தவற்றுடன் ஊற்றவும்.

புளிக்கரைசலை ஊற்றிய பிறகு ஒரு தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.

பின்னர் 8 நிமிடம் கழித்து குழம்பு கொதித்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான வற்றல் குழம்பு ரெடி. விருப்பட்டால் இறக்குவதற்கு சற்று முன்பு அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் வற்றல், மா வற்றல், கொத்தவரங்காய் வற்றல் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்யலாம்.

சோளா பூரி

Need:
  • மைதா மாவு - கால் கிலோ
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - அரை தேக்கரண்டி
 Process:
முதலில் சோளா பூரி செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மைதா மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.

தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.

சுவையான சோளா பூரி தயார். விரும்பிய குருமா அல்லது சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.