Monday, 13 February 2017

பொட்டெட்டோ சீஸ் பால்ஸ்

Need:

  • உருளைக்கிழங்கு - 3

  • வெங்காயம் - 2

  • கொத்தமல்லி - சிறிதளவு

  • கேரட் - 1/2 கப் (துருவியது)

  • சீஸ் - 1/2 கப் (துருவியது)

  • கார்ன் - தேவைக்கேற்ப

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி

  • கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - பொரிப்பதற்கு

  • உப்பு - தேவைக்கேற்ப

  • ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப
Process:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

வரகரிசி உளுந்தங்கஞ்சி

Need:

  • வரகரிசி‍‍‍‍‍‍ - 100 கிராம்

  • தோலுடன் கூடிய‌ உளுத்தம்பருப்பு - 25 கிராம்

  • வெந்தயம் - கால் ஸ்பூன்

  • சீரகம் - கால் ஸ்பூன்

  • முழுப்பூண்டு - 2

  • தேங்காய் துருவல் - அரை கப்

  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையான‌ப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும்.

சற்று நேரம் ஆகி பாதி வெந்ததும் வரகரிசியை கல் நீக்கி சேர்க்கவும்.

அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.

கஞ்சியாக‌ வைத்து எள்ளுத்துவையல் வைத்து சாப்பிடலாம். அல்லது சாதம் போல‌ வைத்து மீன் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Need:
  • கத்தரிக்காய் -1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி - 2
  • தேங்காய் - அரை மூடி (சிறியது)
  • பூண்டு - 10 பல்
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  • புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
  • புளி தண்ணீர் - 2 கப்
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும்).

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.

அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும்.

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

பீட்ரூட் கோதுமை அல்வா

Need:
  • கோதுமை மாவு - 1 கப்
  • ஜீனி - 2 1/2 கப்
  • நெய் - 3/4 கப்
  • முந்திரி பருப்பு - 12
  • கலருக்கு :
  • பீட்ரூட் - 1 (சிறியது)
  • கேரட் - 1 (சிறியது)
Process:
தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். கேரட், பீட்ரூட்டை தோல் சீவி வெட்டி மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து 1 கப் சாறு எடுத்து கொள்ளவும்.

ஜீனி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

ஜீனி கரைந்ததும் பீட்ரூட் சாறை சேர்க்கவும்.

மாவை தோசை மாவு போல் நீர்க்க கரைத்து கொள்ளவும்.

தண்ணீர் கொதித்ததும் கரைத்த மாவை சேர்க்கவும்.

கட்டி பட்டு விடாமல் இருக்க கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அடுத்து சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

அல்வா நன்றாக கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வரும்.

இப்பொழுது இன்னொரு அடுப்பில் நெய்யில் முந்திரியை வறுக்கவும்.

வறுத்த முந்திரியை அல்வாவுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

சுவையான கோதுமை பீட்ரூட் அல்வா ரெடி.

பருப்புக்கீரை கடையல்

Need:
  • பருப்புக் கீரை - 1 கட்டு
  • பாசிப்பருப்பு - 1/4 கப்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு - 4 பல்
  • தக்காளி - 1 (பெரியது)
  • மிளகாய் வற்றல் - 4
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும். பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.

குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

சுவையான பருப்புக் கீரை கடையல் தயார். சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்.