Monday, 13 February 2017

ப்ரட் ஹல்வா

Need:

  • பிரட் - 10 துண்டுகள

  • வற்றிய பால் - 3 கப்

  • கன்டன்ஸ்டு மில்க் - 4 மேசைக்கரண்டி

  • சீனி - 1 கப்

  • ஏலத்தூள் - சிறிது

  • முந்திரி - சிறிது

  • வெண்ணெய் - 1/2 கப் + 3 மேசைக்கரண்டி
 Process:
ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும்.

ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் பிரட் துண்டங்களைப் போட்டு வறுக்கவும்.

அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும்.

அதன் பின்னர் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

பின்னர் சீனி சேர்த்து பிரட்டி விட்டு கொண்டே இருக்கவும்.

அதில் வெண்ணெய் சேர்த்து கட்டிவிழாதவாறு தொடர்ந்து கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும் போது முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான ஸ்வீட் ப்ரெட் ஹல்வா ரெடி

ஸ்டஃப்டு மசாலா இட்லி

Need:

  • இட்லி மாவு - ஒரு பெரிய கப் அளவு

  • பட்டாணி - 1/2 கப்

  • உருளை கிழங்கு - 2 (பெரியது)

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

  • கடுகு - 1/2 தேக்கரண்டி

  • சீரகம் - 1/2 தேக்கரண்டி

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையானப் பொருட்களை எடுத்து கொள்ளவும். பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக் கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மசித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும்.

கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். 

அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.

இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.


சாக்கோ ஷீரா

Need:

  • ரவை - ஒரு கப்

  • சர்க்கரை - ஒரு கப்

  • சாக்லெட் சிரப் - கால் கப்

  • முந்திரி

  • ஏலக்காய் தூள்

  • நெய் - அரை கப்
Process:
தனியே ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அளவுடன் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வரை வறுக்கவும்.

வறுத்த ரவையில் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

வெந்து வரும்போது சாக்லெட் சிரப் பாதி அளவு சேர்க்கவும்.

வாணலியில் ஒட்டாதவாறு அவ்வபோது கிளறிவிடவும்.

எல்லாம் சேர்ந்து கேசரி பதத்திற்கு திரண்டு வந்ததும் முந்திரி தூவி இறக்கவும்.

மீதி சாக்லெட் சிரப்பை மேலே ஊற்றி, பாதாம் தூவி பரிமாறவும். சுவையான சாக்கோ ஷீரா தயார்.

மிளகு காரச் சட்னி

Need:

  • தக்காளி - 5 (பெரியது)

  • காய்ந்த மிளகாய் - 4

  • மிளகு - 1 தேக்கரண்டி

  • வெந்தயம் - 3/4 தேக்கரண்டி

  • பெருங்காயம் - சிறிதளவு

  • நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி

  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

சுவையான மிளகு கார சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

அச்சு முறுக்கு

Need:

  • பச்சரிசி - 1 கிலோ

  • சர்க்கரை - 300 கிராம்

  • முட்டை - 3

  • தேங்காய் - 1

  • எண்ணெய்
Process:
முதலில் தேங்காயை துருவி கெட்டியாக‌ பாலெடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நனைய‌ வைத்து டவலில் ஈரத்தை போக்கி, நீர் விடாமல் மிக்சியில் நைசாக‌ பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

அத்துடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

அதில் மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசை மாவு பதத்தில், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாக இருக்கும். நீர்க்க இருந்தால் முறுக்கு மொறுமொறுப்பாக வரும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் முறுக்கு அச்சினை முக்கி சூடாக்கவும். அச்சு சூடாக இருந்தால்தான் மாவு அதில் ஒட்டும்.

சூடான‌ அச்சை மாவில் முக்கால் பாகம் அமிழ்த்தி எடுக்கவும். முழுவதும் அமிழ்த்தினால் முறுக்கு அச்சில் இருந்து கழன்று விழாது. கவனம் தேவை.

மாவுடன் கூடிய அச்சை எண்ணெயில் அமிழ்த்தவும். மாவு சற்று வெந்ததும் முறுக்கானது அச்சில் இருந்து பிரிந்து வந்துவிடும்.

முறுக்கு சிவந்து வந்ததும் எடுக்கவும்.

இதே போல் எல்லா மாவையும் முறுக்காக சுட்டு எடுக்கவும். சட்டியின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று பொரித்து எடுக்கலாம்.